உயிரை உயிருக்குள்
ஒளித்துவைக்கும்
மர்ம முடிச்சில் நீ
மனமகிழ்கிறாய்...
உன் மர்ம முடிச்சுகளுக்கு
மேலும் முடிச்சிட்டு
ரகசியம் பேணுகிறாய்...
நீ சடைபின்னும் நேர்த்தியை
இப்பொழுது அறிய முடிகிறது...
அந்த
ரகசிய மாளிகையில்
ரகசியத்தோடு ரகசியமாய்
ரகசிய முடிச்சிடப்பட்ட
என் காதல் ரகசியங்களை
பகிரங்கப்படுத்த நீ
விரும்புவதில்லை...
என்பதால்
நீ என்னை
விரும்பும் ரகசியம்கூட
இன்னமும்
ரகசியமாகவே இனிக்கிறது...
ஆனால்...
உன்னை நினைத்த வினாடியில்
ஒளித்துவைக்கப்பட்ட ரகசியங்கள்
அம்பலமாகி மழையெனப்
பொழியத்தொடங்கிவிடுகின்றன...
அந்த ரகசியம் மட்டும்
எனக்குப் புரியவேயில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக