
இனி உன்பாடு
திண்டாட்டம்தான்..
இதோ
என் முரட்டுக்கவிதைகள்
உன்னைக் காதலிக்கத்தொடங்கிவிட்டன...
எனை நினையெனக்
கணைதனைப் புனை..
பனைமனையெனை
சினைவினைந்தனை
நனை நீ சுனை
இணையெனைப் பிணை
பிணைந்தெனை அணை
உனை எனையாக்க முனை
திணை நீ வாழ்க்கைத் துணை...
என் தனிமைச் சாபத்தை
வேரறுக்க உன்னைத்
துணையாக்கி வரம்தந்தாய்..
பகலில்
இரை தேடிப்பறந்த பறவை
இரவில்
இணை தேடிக்கூடு திரும்புகிறது...
துணைதேடிப் பறந்த காலம் போய்
இணைதேடிப் பறக்கிறது வாழ்க்கை..
இணைக்கும் துணைக்குமிடையே
நூலிழை வித்தியாசம்தான்..
துணை எனதாய் இல்லாதிருக்கலாம்.
இணை தனதாய் மட்டுமே இருக்க இயலும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக