Custom Search

திங்கள், 21 பிப்ரவரி, 2011

முள்



இதோ
எட்ட இருந்தபடியே என்னை
எட்டிப்பிடித்துக் 
குத்தத்தொடங்கிவிட்டது உன்
காதல் முள்...
அதில் உடலெங்கும்
இரத்தக் கிறுக்கல்கள்
இந்தக் கவிதை வரிகள் போல...

நீ மணிமுள் போல
அழுத்தமானவள்...
உன்னை நிமிடத்திற்கொருமுறை
முத்தமிட்டுத் தோற்கும்
நொடிமுள் நான்...

உன் பிரிவை நினைந்து
தூங்கமாட்டாத இரவுகள்...
ஏங்க மட்டுமே உயிர்த்திருக்கும்
இந்த நொடிமுள்..

என்னுள் நீ
முத்தமிட்டதைவிட உன்
நினைவுகளின் முத்தத்தின்
காயங்கள் அதிகம்..

நொடிக்கொருமுறை அலைவுறும்
நொடிமுள் போல நான்...
என் நினைவுகளுக்குள்
அலைவுறுது காதல் நிமிடமுள்...

ஒட்டுமொத்த உன் நினைவுகளில்
தீண்டப்படுகிறது...தூண்டப்படுகிறது...
இந்த நொடிமுள்...

நீ
நான்
காதலென 
மூன்றுவகை முட்களைக் 
காலமாக்கிக் காட்டுகிறது 
வாழ்க்கையெனும் மணிப்பொறி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக