Custom Search

புதன், 25 நவம்பர், 2009

சிறை...










சிறைக்குள் நீ
சிறைக்கு வெளியே
சிலகோடி
ஆசைகளுடன்
ஏக்கங்களுடன் நான்...

நீ
பெண்மையெனும்
கூண்டில் சிக்கி
உண்மையிழந்து
தவிக்கிறாய்....


என்
அர்த்தக் கேள்விகளுக்கான
விடையை
அர்த்தமற்ற உன்னிடமே
கேட்கிறேன்....

"என்னைக்
காதலிக்கிறாய்தானே..?"

வசீகரிக்கும் புன்னகையை
பதிலாய் அனுப்புகிறாய்...
அழகில்
திக்கற்றுப்போய்
திசைமாறுகிறது கேள்வி...


ஒருநாள்
சிறையைப் பொத்துக்கொண்டு
நீ வெளிவரக்கூடும்..

அந்தநாள் எந்தன்
வாழ்நாளின்
மௌன நகைப்புகளுக்கு
விடைகோலும் நாள்...

நீ
மகிழ்ச்சியுடன்தான்
இருக்கிறாய்....

என்னிடம் அகலவிழிகாட்டி
பொம்மை நாய்க்குட்டியை
வாரியணைத்து
முத்தமழை பொழிகிறாய்...

அருகாமைக் குழந்தையின்
பட்டுக்கன்னங்களை - என்
அறியாமை முற்ற
தொட்டுக்கிள்ளி விளையாடுகிறாய்

சிறையிருப்பது பற்றி நீ
யோசிப்பதே இல்லை- இந்த
கறைபடிந்த மனதுதான்
யாசித்துத் தவிக்கிறது....
திரைக்குள் ஒளிந்த
உண்மை வேண்டி...

அழகு தேவதையின்
மரணக்குடிலாய்
உன் கூண்டு....

அதுவே
மகிழ்வான கூண்டென
மனனம் செய்துகொள்கிறாய்...
நெகிழ்வான என்மனதோ
மகிழ்வின்றித் தவிக்கிறதே....

இதுவரை நீ
வெளிவரவில்லை..
வெளிவர விரும்பவுமில்லை..

இப்பொழுது புரிகிறது
சிறைக்குவெளியே நீ...
உன் நினைவில்
சிலகோடி ஆசைகளுடன்
பலகோடி ஏக்கங்களுடன்
சிறைக்குள் நான்...................?!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக