Custom Search

வெள்ளி, 20 நவம்பர், 2009

இருட்டு...



இரண்டு
வெவ்வேறு குப்பியில்
பரிணமித்திருக்கும்
ஒளிப்பேழைகள் நாம்...

ஓங்குபண்பைப் போலவே
ஒடுங்குபண்பும்
வாழ்வின் நியதி....
பிறப்புக்கு நடுநடுவே
இறப்பும் நியதிதானே...

இந்த மிகக்குறைவான
வாழ்நாளில்
நீ எனக்கு அறிமுகமாகிறாய்..
முற்றுப்பெறாத
சொற்களை உள்ளடக்கி...

ஒளிர்தல் மட்டுமே
என் கடமை - நான் ஏன்
உன்னைப்பார்க்கவேண்டும்..??

அறிந்தும் அறியாமலும்
உன்னைப்பார்த்தவுடன்
என்னைச்
செமித்துவிட்டேன்...
 
என் ஒளிவீச்சை
நான் இழக்கவில்லை - என்றாலும்
ஒளிரவுமில்லை...
அந்த வெளிச்சம் எவருக்கும்
உதவவுமில்லை...

சலனப்படுகிறேன்..
ஒளி மங்கித் தவிக்கிறேன்..
ஒளியுடன் இருக்கும்போதே
இருளாய் உணர்கிறேன்...

என்
ஒளிப்பேழையைத்தான் -
உன் மௌனபிம்பம்
இருட்டடித்துவிட்டதே..

இருளில் மூழ்கி
உயிர்விடுவதைவிட
உன் மௌனத்தில் மூழ்கி
உயிர்விடுவது
எத்தனை கொடூரமானது...!?

எதிர்ப்புகளை
விழுங்கிவிட்ட இருட்டின்
இரண்டு
ஒளிப்பேழைகள் நாம்...

நாமும் ஒருநாள்
விழுங்கப்படுவோம்...
இருள் நம்மை
ஏப்பம்விடக் காத்திருக்கிறது..

இருள் நம் வாழ்க்கை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக