Custom Search

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

நீ... நீ மட்டுமே....


என்
வெட்டவெளி
இதயத்தைச்
சுட்ட விழியினளே...
 
என் வெற்றுமனதைக்
கூடாரமாக்கி
குடிபுகுந்தவளே...
 
உன்
புன்னகை சிந்தும்
பூவிதழ் கண்டே
புவித் திங்களும்
புத்தொளி வீசுகிறான்...
 
விண்ணொத்த
கருங்கூந்தல்
வெள்ளிகளை உசுப்புகிறது...
 
விற்கணை புருவத்தை
விகற்பமாய்ப் பார்த்து
சொற்றனை இழந்தேன்...
 
நீலவிழிகொண்ட
கோல மகளே...
உன்
விழிகண்டு
விதியமைத்த பிரம்மனும்
மதிமயங்கல் கண்டேன்...
 
பரிகசிக்கவியலாத
யதார்த்தம் உன்
பார்வை - என் இதயத்தின்
பதார்த்தம்...
 
உன் பார்வை
அம்புகள் தைத்ததில்
குருடாகிப் போயின
என் அகக்கண்கள்..
 
இளம்
வாழைக்குருத்து நாசி...
களைத்த பெருமூச்சில்
சுருங்கி விரிவதுகண்டு
இளைத்துப் போகும்
இந்த மனசு...
 
உன்
செவிமடல்கள் - என்
கவிமடல்களுக்கு
அப்பாற்பட்டவை...
 
சிவந்த
தாமரைப்பூவில்
பவளத்தைப் பூசிய
இதழ்கள் - இந்த
இதயம் முழுவதும் உன்
இதழ்களுக்கடக்கம்...
 
உன் குரலுக்குப்
போட்டியிட்டுத்
தோற்கும்
கால் கொலுசு...
 
வரட்சி சிறிதுமற்று
வசிக்கும் உன் கன்னம்
உனைக்கண்ட
மிரட்ச்சியில்
சிறிது கெட்டு
மசித்துப் போனதாய்
என் எண்ணம்...
 
இத்தனை ஆயுதங்களை
முகத்தில் தரித்து
நிராயுதபானியான என்னை
முகப்பிலேயே எதிர்கொள்கிறாய்..
 
ஒவ்வொரு ஆயுதமும்
பலமாய்த் தைக்கிறது
இதயத்தில்...
 
இத்தனை
தாக்குதல்களின் பின்னும்
தளராமல் நகர்கிறேன்
உன்னிடத்தில்
 
காரணம்
நீ.... நீ மட்டுமே...
இந்த இதயத்தைச்
சல்லடையாக்கியவள்
நீ... நீ மட்டுமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக