Custom Search

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வேவு

முற்றுப்பெறாத இந்தக்
காதல் அத்தியாயத்தில் சிக்கித்
திணறிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை...

காதல் வீதியில்
எதிரெதிர் வீட்டில்தான்
நீயும் நானும்...

உடைந்து கிடக்கும்
பிறை வளையலாய் நிலவு...
உடைந்த நிலவின்
நொறுங்கிய துகள்களாய்
விண்மீன் கிறுக்கல்கள்...

நொறுங்கிய இந்த
இதயச் சில்களைக்
காதல் நூல்கொண்டு
கோர்க்க முனைகிறேன்...

தென்றலில் தத்தளிக்கும்
சிறகுபோல உன்னிடம் சிக்கித்
தத்தளிக்கிறது காதல்..

பெண்மைத்தாழிட்டுப்
பூட்டித்தான் கிடக்கிறது
உன் காதல்க் கதவு...

முகம்காண ஏங்கி
முற்றச்சிறையிலடைகின்றேன்...
கைகொட்டிச் சிரிக்கிறது நிலவு...
நான் அழுவதா...? சிரிப்பதா..?
விசும்பல்களோடே
அஸ்தமிக்கிறது கிழமை...

முற்றச்சிறையிலிருந்து விடுபட்டு
மூலச்சிறைக்குள் அடைபடுகிறேன்..
முனகலுடன் மூடிக்கொள்(ல்)கிறது
என் இதயக்கதவு...

மென்மையாய்த்தன் இருபுறக்
கதவுகளையும் தட்டிப்பார்த்து
திருப்தியடைந்துகொள்கிறது
காதல்...

நீயோ...
பலமுறை தட்டியும்
திறக்காத கதவுகளிடை
சாளரம் மட்டும் திறந்து 
வேவுபார்க்க முனைகிறாய்...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

நீ... நீ மட்டுமே....


என்
வெட்டவெளி
இதயத்தைச்
சுட்ட விழியினளே...
 
என் வெற்றுமனதைக்
கூடாரமாக்கி
குடிபுகுந்தவளே...
 
உன்
புன்னகை சிந்தும்
பூவிதழ் கண்டே
புவித் திங்களும்
புத்தொளி வீசுகிறான்...
 
விண்ணொத்த
கருங்கூந்தல்
வெள்ளிகளை உசுப்புகிறது...
 
விற்கணை புருவத்தை
விகற்பமாய்ப் பார்த்து
சொற்றனை இழந்தேன்...
 
நீலவிழிகொண்ட
கோல மகளே...
உன்
விழிகண்டு
விதியமைத்த பிரம்மனும்
மதிமயங்கல் கண்டேன்...
 
பரிகசிக்கவியலாத
யதார்த்தம் உன்
பார்வை - என் இதயத்தின்
பதார்த்தம்...
 
உன் பார்வை
அம்புகள் தைத்ததில்
குருடாகிப் போயின
என் அகக்கண்கள்..
 
இளம்
வாழைக்குருத்து நாசி...
களைத்த பெருமூச்சில்
சுருங்கி விரிவதுகண்டு
இளைத்துப் போகும்
இந்த மனசு...
 
உன்
செவிமடல்கள் - என்
கவிமடல்களுக்கு
அப்பாற்பட்டவை...
 
சிவந்த
தாமரைப்பூவில்
பவளத்தைப் பூசிய
இதழ்கள் - இந்த
இதயம் முழுவதும் உன்
இதழ்களுக்கடக்கம்...
 
உன் குரலுக்குப்
போட்டியிட்டுத்
தோற்கும்
கால் கொலுசு...
 
வரட்சி சிறிதுமற்று
வசிக்கும் உன் கன்னம்
உனைக்கண்ட
மிரட்ச்சியில்
சிறிது கெட்டு
மசித்துப் போனதாய்
என் எண்ணம்...
 
இத்தனை ஆயுதங்களை
முகத்தில் தரித்து
நிராயுதபானியான என்னை
முகப்பிலேயே எதிர்கொள்கிறாய்..
 
ஒவ்வொரு ஆயுதமும்
பலமாய்த் தைக்கிறது
இதயத்தில்...
 
இத்தனை
தாக்குதல்களின் பின்னும்
தளராமல் நகர்கிறேன்
உன்னிடத்தில்
 
காரணம்
நீ.... நீ மட்டுமே...
இந்த இதயத்தைச்
சல்லடையாக்கியவள்
நீ... நீ மட்டுமே...